[ad_1] ‘Duleep Trophy’ கிரிக்கெட் போட்டிகள் - உறுவான கதை என்ன?

‘Duleep Trophy’ கிரிக்கெட் போட்டிகள் - உறுவான கதை என்ன?

mukesh M, Samayam Tamil

Aug 19, 2024

Duleep Trophy!

துலீப் டிரோப்பி (Duleep Trophy) எனப்படுவது இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு (பிராந்திய) கிரிக்கெட் போட்டி ஆகும். முதல் தர கிரிக்கெட் போட்டியான இது 1961-62 முதல் நடைப்பெற்று வருகிறது!

Image Source: twitter-com/bcci

பெயர் காரணம் என்ன?

பெயர் காரணம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இந்தியர் குமார் சிரி துலீப்சிங்ஜீ அவர்களின் நினைவாக இந்த துலீப் டிரோப்பி கிரிக்கெட் போட்டிகள் 1961-ஆம் ஆண்டு துவங்கி நடத்தப்பட்டு வருகிறது!

Image Source: twitter-com

6 மண்டலங்கள்!

ஆரம்ப காலத்தில் இந்த துலீப் டிரோப்பி போட்டிகள் ஆனது இந்தியாவின் பல்வேறு புவியியல் மண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 6 மண்டலங்களாக பிர்த்து விளையாடப்பட்டது!

Image Source: twitter-com

தெற்கு மண்டலத்தில் தமிழகம்!

வடக்கு, கிழங்கு, மத்திய மேற்கு, வட-கிழக்கு மற்றும் தெற்கு மண்டலம் என 6 மண்டலமாக அணிகள் பிரிக்கப்பட்ட நிலையில்; தெற்கு மண்டலத்தில் தமிழகம், கர்நாடகம், கோவா, ஆந்திரா, ஐதராபாத், பாண்டிச்சேரி, கேரளா வீரர்கள் இடம்பெற்றனர்.

Image Source: twitter-com

ரஞ்சி டிரோப்பியும் - துலீப் டிரோப்பியும்!

துலீப் டிரோப்பியில் இடம்பெறும் ஒவ்வொரு மண்டல அணியும் இந்தியாவின் அந்த பகுதியில் அமைந்துள்ள ரஞ்சி டிராபி மாநில/நகர அணிகளுக்காக விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் கூட்டு அணியாக அமைந்திருந்தது!

Image Source: twitter-com

வெளிநாட்டு அணிகளுக்கு வாய்ப்பு!

குறிப்பிட்ட இந்த மண்டல அணிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது, மண்டல அணிகளுடன் கூடுதலாக வெளிநாட்டு அணி ஒன்றை அழைத்து விளையாடுவது என வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து விளையாடும் போட்டியாகவே துலீப் டிரோப்பி (2009-10 வரையில்) இருந்தது. பின் இந்த வழக்கம் கைவிடப்பட்டது!

Image Source: twitter-com

BCCI-ன் வசதிக்கு ஏற்ற வகையில் மாற்றங்கள்!

துலீப் டிரோப்பி போட்டிகள் ஆனது BCCI-ன் வசதிக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது ஒரு சில மாற்றங்களுடன் (அணிகளின் எண்ணிக்கை, வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு போன்றவற்றுடன்) நடத்தப்பட்டு வருகிறது!

Image Source: twitter-com

பிராந்திய அடையாளம் நீக்கப்பட்டது!

அந்த வரிசையில் எதிர்வரும் 2024-25 ஆண்டுக்கான தொடரில், பிராந்திய அடையாளத்தை அழித்து, நாடெங்கிலும் உள்ள 60 வீரர்களை தேர்வு செய்து - அணிக்கு 15 வீரர்கள் என 4 அணிகளாக பிரித்து தொடரை நடத்தவுள்ளது.

Image Source: twitter-com

இதன் ஆபத்து என்ன?

துலீப் டிரோப்பியில் பிராந்திய வீரர்களுக்கான முன்னுரிமை தவிர்க்கப்படும் நிலையில், தேசிய அணியில் அவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படும். அதாவது, தெற்கு மண்டலத்தில் தென் மண்டலத்தை (தமிழகம், கர்நாடகா, கேரளா...) சேர்ந்த வீரர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படும் அவலம் ஏற்படும்!

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: இந்திய அணியில் 'விராட் கோலியை' வழிநடத்திய வீரர்கள் பற்றி தெரியுமா?

[ad_2]